வட மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளில் பலவற்றில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட நாள் காய்ச்கல் , கண் சிவத்தல் , உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.
மேலும், கடந்த வருடம் 9,000இற்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.