வெளிவிவகார, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்ட Charity Bazaar: சவூதி தூதரகமும் பங்கேற்பு

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடந்த சர்வதேச தொண்டாற்றும் நோக்கிலான (Charity Bazaar) பஸாரில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம்  பங்கேற்றது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்  விஜித ஹேரத் கலந்து கொண்டார்.

சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) , அந்நாட்டின் பாரம்பரிய தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்ததுடன், பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்த பஸார், பல நாட்டுத் தூதரகங்கள் இணைந்து தொண்டாற்றும் பணிகளை முன்னேற்றுவதற்காக நடத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையும் சர்வதேச நட்புறவையும் வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...