இந்திக்க தொட்டவத்தவிற்கு எதிரான ஜம்இய்யதுல் உலமாவின் வழக்கு, ஜனவரி 28 இல்..!

Date:

நபிகளாரை அவமானப்படுத்தும் விதத்தில் கடந்த வருடம் யூடியூப் பதிவொன்றை வெளியிட்ட இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இந்திக்க தொட்டவத்தவின் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வதற்கு வேண்டிக் கொண்டபோது இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டு சமரசப்படுத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் சொல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் யூடியூபில் பதிவிட்டுருந்தமையும் அதனைக் கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...