இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Date:

இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே ‘அல் குத்ஸ் டுடே’ என்ற சேனலுக்கு சொந்தமான ஒளிபரப்பு வேன் மீது நடத்திய இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்களும்  கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போதே, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...