இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Date:

இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே ‘அல் குத்ஸ் டுடே’ என்ற சேனலுக்கு சொந்தமான ஒளிபரப்பு வேன் மீது நடத்திய இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்களும்  கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போதே, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...