உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் காலவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...