உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் காலவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...