சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நிறைவு!

Date:

2024 (2025) கல்விப் ‍பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆரம்பத்தில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

மோசமான காலநிலை காரணமாக பின்னர், அந்த கால அவகாசம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...