சிரியாவில் புதிய அரசியல் காலம்: 15 ஆண்டுகளுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு..!

Date:

சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.

அந்நாட்டின் போராளிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றுகின்ற போது  பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஹமா நகரைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற தருணங்கள், சிரியாவின் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைகளுக்கு ஒரு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://web.facebook.com/reel/582081400972765

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...