ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Date:

ஜனாதிபதி நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் குழுவொன்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துமூலம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பொதுமக்களின் நிதியைப் பாதுகாப்பதற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி நிதிச் சட்டத்தில் தெளிவான அளவுகோல்கள் உள்ளதாகவும், அந்த அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டு பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முறைப்பாட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...