ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல பத்திரிகை விளம்பரங்களில் செய்திகள் வெளியாகின. அவர் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.

எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் என எங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...