ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல பத்திரிகை விளம்பரங்களில் செய்திகள் வெளியாகின. அவர் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.

எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் என எங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...