நுரைச்சோலையில் மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளர் மூவர் ஸ்தலத்திலேயே பலி

Date:

நுரைச்சோலை மாம்புரி பிரதேசத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16, 22, 29 வயதுடைய புத்தளம், பழைய மன்னார் வீதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாம்புரி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த விழா மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் பெற்றுக் கொண்டு கொத்தனார் மற்றும் தச்சர்களை பணிக்கு அமர்த்தி குறித்த நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்த வேளையில், நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை) மாலை மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதன்போது  4 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மின்சாரத்தை பெறுவதற்கான மின்கம்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக, மின்சாரம் தாக்கியதில் ஒருவர் அதிலிருந்து வீசப்பட்டு கீழே வீழ்ந்துள்ளார்.

எனினும் ஏனைய 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை பொலிஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியவர்களை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கிய போது பணியின் போதான அடிப்படை பாதுகாப்பு விடயங்களை பின்பற்றவில்லையெனவும், உரிய காலணிகள், கையுறைகள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாரும், நுரைச்சோலை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூலம்: தினகரன்

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...