இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) காலமானார்.
அன்னாரின் ஜனாஸாத் தொழுகை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசலில் நடாத்தப்பட்டு சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெற உள்ளது.