கத்தார் தேசிய தினம்: இலங்கைக்கான தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரமாண்ட நிகழ்வு.

Date:

கத்தார் நாட்டின் தேசிய தினம் நேற்று (11) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கைக்கான கத்தார் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் அல் சொரூர் தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில்  சிறப்பாக இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயர் றிஸ்வி சாலி, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்,  பாராளுன்றத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள்,  அரசியல் பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள்,  உலமாக்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதம அதிதி மற்றும் தூதுவர் உள்ளிட்டவர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக கேக் வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...