வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் பகுதிக்கு முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு!

Date:

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்பு சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாவை முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து (MCF) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை இன்று (12) முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் வைத்து கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜனாப். ரிஸான் ஹுசைன் அவர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர்  எம்.எஸ். அலா அஹ்மத், வக்பு பிரிவு பொறுப்பாளர் ஜனாப். ஏ.எஸ்.எம். ஜாவித், வக்பு நியாய சபை செயலாளர் (பதில்)  எம்.என்.எம். ரோஸன், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களின் பொறுப்பதிகாரி  எம்.ஐ.எம். முனீர், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்  . எம்.ஐ.எம். மஸீன், மற்றும் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்  ரிஸான் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...