வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி..!

Date:

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  அறிவித்துள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு மருத்துவர்களின் அசல் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, ஆனால் முந்தைய அரசு 2022 இல் அதை 60 ஆகக் குறைத்துள்ளது என்று அவர் விளக்கினார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...