Update: பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதிய இளைஞர் ஏறாவூர் பொலிஸாரால் விடுவிப்பு!

Date:

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய குறிப்பேட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (16) ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன் ரயில் மூலம் கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக ஏறாவூருக்கு வருகை தந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்த குறிப்பேட்டில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை பொலிஸார் அவதானித்தனர். இதனையடுத்து, குறித்த இளைஞன், விசாரணையின் பின்னர் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

இவர் தனது குறிப்பேட்டில் ’60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என எழுதியிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...