Update: பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதிய இளைஞர் ஏறாவூர் பொலிஸாரால் விடுவிப்பு!

Date:

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய குறிப்பேட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (16) ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன் ரயில் மூலம் கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக ஏறாவூருக்கு வருகை தந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்த குறிப்பேட்டில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை பொலிஸார் அவதானித்தனர். இதனையடுத்து, குறித்த இளைஞன், விசாரணையின் பின்னர் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

இவர் தனது குறிப்பேட்டில் ’60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என எழுதியிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...