ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்கானி கொல்லப்பட்டார்.
விருந்தினராக மாறுவேடமிட்டு அமைச்சுக் கட்டிடத்திற்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி, அமைச்சர் கடிதமொன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்த போது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இவர் உள்துறை பொறுப்பு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.
தலிபான் பதவி ஏற்ற பிறகு அமைச்சரவையில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும்.
இதுவரையில் குறித்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய கலீல் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகுஇ அங்கு உயர்மட்ட அளவில் கொலைகள் நடப்பது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.