காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலால் தனது தந்தையை இழந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் கதறும் வீடியோ உணர்வுகளை உறைய வைக்கின்றன.
இப் போரின் விளைவாக ஏற்பட்டுள்ள அழும் குரல்களும், சோகத்துடன் கூடிய நிகழ்வுகளும் மனிதாபிமானம் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.
தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் ஈவிரக்கமற்ற முறையிலும் இடம்பெறும் இப் போரின் போது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களின் வாழ்வை இழந்து வருவது குறித்த அக்கறை குன்றியதாக இருப்பது உலக மட்டத்தில் மனிதாபிமானம் செத்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.
உலகின் அனைத்து சமுதாயங்களும் இந்த சோகத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரினதும் ஒரே கோரிக்கையாகும்.