சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர்

Date:

சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக   அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் நஜா முஹம்மத், இளைஞர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்க முன்வந்ததன் அடிப்படையில், கட்சியின் தலைமைத்துவ சபை நேற்று முன்தினம் (14) எடுத்த முடிவின் பிரகாரம், கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக செயலாளராக சமூக நீதிக் கட்சியில் தனது பயணத்தை தொடங்கிய அர்க்கம் முனீர், பின்னர் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சமூக நீதிக் கட்சியானது, சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும் “ஒரு நீண்ட கால அரசியல் வேலைத்திட்டத்துடன் கட்சியை முன்னே நகர்த்த வேண்டும்” என்கின்ற அடிப்படையில் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் குறித்த அறிவிப்பை முதற்கட்டமாக வெளியிடவும், கட்சியின் ஏனைய முக்கிய பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் திட்டங்கள் மற்றும் கட்சியின் நீண்ட பயணத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களை அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடவும் கட்சி உத்தேசித்துள்ளது.

இவ்வாறு கட்சியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களானது, கட்சியின் அடுத்த பேராளர் மாநாடு வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...