பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை விருப்பம்: அநுரகுமார புட்டினுக்கு கடிதம்!

Date:

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம்.

மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் தற்போது 3.6 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பத்து நாடுகளை உள்ளடக்கியது.

இந்த நாடுகள் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...