புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

Date:

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது.

அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் பாடசாலை சீருடை துணி வழங்கப்படும்.

2023 ஆம் ஆண்டில், மொத்தம் 4,585,432 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றிருந்த நிலையில், 70 சதவீத சீருடைகள் சீனாவால் மானியமாக வழங்கப்பட்டன. மீதமுள்ள 30% உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ. 2,493,762 மில்லியன் செலவில் பெறப்பட்டது.

அத்தோடு, 2024 இல், 4,559,420 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றதோடு, 80 சதவீத துணி (9,259,259 மீட்டர்) சீனாவால் மானியமாக வழங்கப்பட்டது, அதன் மதிப்பு ரூ. 5,317 மில்லியன் ஆகும்.

எஞ்சிய 20% (1,938,399 மீற்றர்)  இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் லிமிடெட் மூலம் மானியமாக, அமைச்சரவை அனுமதியுடன், ரூ. 970 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...