மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் ஜனவரி 17இல்

Date:

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவுக்கான பொது கலந்துரையாடல்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 08 ஆம் திகதி வரை எழுத்துப்பூர்வ கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் 09 அமர்வுகள் மூலம் வாய்வழி கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, எழுத்துப்பூர்வ கருத்துக்களை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 427 1030 என்ற WhatsApp இலக்கத்திற்கு அல்லது தபால் மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம்.

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...