மக்கள் விடுதலை முன்னணி செயலாளரை சந்தித்த ஷுரா சபை..!

Date:

தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேற்று (06) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது.

இச்சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் பளீல், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்,சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஸூர், சபையின் உப தலைவரும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவருமான சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று மற்றும் வழிநடாத்தற் குழு உறுப்பினர் இக்ராம் அவர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை...

சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த பிரபல கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவம்

பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...