வெளிவிவகார, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்ட Charity Bazaar: சவூதி தூதரகமும் பங்கேற்பு

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடந்த சர்வதேச தொண்டாற்றும் நோக்கிலான (Charity Bazaar) பஸாரில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம்  பங்கேற்றது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்  விஜித ஹேரத் கலந்து கொண்டார்.

சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) , அந்நாட்டின் பாரம்பரிய தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்ததுடன், பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்த பஸார், பல நாட்டுத் தூதரகங்கள் இணைந்து தொண்டாற்றும் பணிகளை முன்னேற்றுவதற்காக நடத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையும் சர்வதேச நட்புறவையும் வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

 

 

 

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...