அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு .

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது.

வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அர்கம் நூராமித் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் ஜம்இய்யதுல் உலமா பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் இலங்கையர்களை நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ ஜம்இய்யா வழிகாட்டுவதையும் விளக்கியதோடு நாட்டில் முஸ்லிம்களின் மத, கலாசார மற்றும் மனித உரிமைகள் குறித்து இதுவரை தேசிய அளவில் உலமா சபை மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கம் தரப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கலந்துரையாடப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக, மத பாகுபாடு இல்லாமல், அவர்களின் அதிகார வரம்பிற்குள் தேவையான வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றும் வெளிவிவகார அமைச்சருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...