இன்று முதல் நாடளாவிய ரீதியில் இந்திய திரைப்பட விழா

Date:

இந்தியத் திரைப்பட விழாவானது, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள நகரங்களில் நடத்தப்படும், என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள PVR Cinema இல் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06.30 மணியளவில், பொலிவூட் ஹிட் திரைப்படமான ‘83’ திரையிடலுடன் இத்திரைப்பட விழாவானது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்துடன் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்விழாவில் நாடகம், காதல், சண்டைக்காட்சி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் அடங்கிய செழுமையான திரைப்படங்களின் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பிற்கு மேலதிகமாக பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.

இத்திரைப்பட விழாவிற்கான அனுமதி இலவசம், அனுமதி சிட்டைகளை பெற்றுக்கொள்ள dir.icc.colombo@gmail.com மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும்.

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...