ஈரானில் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

Date:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உள்ளது. அங்குள்ள நீதிபதிகளின் ஓய்வு அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கு அமர்ந்திருந்த நீதிபதிகள் இருவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் தேசிய பாதுகாப்பு, உளவு பார்த்தல், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை கையாண்டு வந்ததாகவும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...