சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர  தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை மறுதினம் (08) புதன்கிழமை முதல் 12 ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது 3,23,739 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

எவ்வாறாயினும் பரீட்சைக்கு முன்னர், பகுதி 01 இல் காணப்பட்ட 03 வினாக்கள் வெளியானதையடுத்து பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பெறுபேறுகளை வெளியிட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளான முன்று வினாக்களுக்கும் சகல பரீட்சாத்திகளுக்கும் புள்ளிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

 

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...