நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

Date:

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 18 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC/ CEYPETCO) அறிவித்துள்ளது.

அந்த வகையில், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 313 இலிருந்து ரூ. 331 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத விலைத் திருத்தத்திற்கு அமைய, மண்ணெண்ணெய் விலை மாத்திரம் ரூ. 5 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் CEYPETCO எரிபொருள் விலைகள் வருமாறு…

CEYPETCO/ LIOC

  • சுப்பர் டீசல்: ரூ. 18 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 331
  • மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 188
  • பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 309
  • ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை  – ரூ. 286
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371

 

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...