அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு .

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது.

வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அர்கம் நூராமித் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் ஜம்இய்யதுல் உலமா பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் இலங்கையர்களை நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ ஜம்இய்யா வழிகாட்டுவதையும் விளக்கியதோடு நாட்டில் முஸ்லிம்களின் மத, கலாசார மற்றும் மனித உரிமைகள் குறித்து இதுவரை தேசிய அளவில் உலமா சபை மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கம் தரப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கலந்துரையாடப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக, மத பாகுபாடு இல்லாமல், அவர்களின் அதிகார வரம்பிற்குள் தேவையான வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றும் வெளிவிவகார அமைச்சருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய்...

அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண...

நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

சுகாதார சேவையின் உச்ச பலனை  இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார...

பஹன மீடியா தலைவரின் தாயார் மறைவு!

பஹன மீடியா நிறுவனத்தின் தலைவரும் மீட்ஸ் செயல்திட்டத்தின் ஸ்தாபகருமான சமூக செயற்பாட்டாளர்...