இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்’ தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
“துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் கொள்கைகள்” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர் தன்னுடைய துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மிகப்பெறுமதியான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதி கற்கையை பூர்த்தி செய்த அஷ்ஷெய்க் சுபியான் நளீமி அவர்களுக்கு ‘நியூஸ்நவ்’இன் வாழ்த்துக்கள்.