இரவு நேரப் பயணங்களுக்கு சிகிரியா திறக்கப்படவில்லை: புத்தசாசன அமைச்சு விளக்கம்

Date:

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா (Sigiriya) கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

சீகிரியா கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது,  சீகிரியா  கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவு நேரத்தில் விளக்குகளுடன் கூடிய சிகிரியாவின் படம் போலியானது என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...