கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு

Date:

1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு (27) திங்கட்கிழமை இரவு கொழும்பு – 10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில்  இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு -10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முஸ்லிம் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான என். நிலூபர், அலா அஹமட், கணக்காளர் முஹம்மட் நிப்ராஸ் உட்பட திணைக்கள அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முப்தி, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் உட்பட உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், கொழும்பு பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பள்ளிவாசல் குழு உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (பௌசி) மிஹ்ராஜ் இரவின் முக்கியத்துவத்தைப் பற்றி பயான் நடாத்தினார்.

அத்தோடு, விசேட சிறப்பு பிரார்த்தனையை (துஆ) மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் பிரதம இமாம் காரி அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ்
நவவி நிகழ்த்தினார்.

கொழும்பு-10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலின் தலைவர் மௌலவி ஏ.சீ.எம். பர்ஸாத் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தினார்.

புனித மிஃராஜ் தின இரவு நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...