சவூதி நிதியுதவில் குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Date:

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த கிண்ணியா – குறிஞ்சாக்கேணி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படடுள்ளது.

சவூதி நிதியுதவின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தி பணிகளுக்கென திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் அப்துல் மொஹ்சென் அல் முத்லாவும் கையெழுத்திட்டனர்.

இந்த பாலம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சுமார் 100,000 மக்களின் பயணத்தையும் வணிக நடவடிக்கைகளையும் எளிதாக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பேராதனை பதுளை செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திலிருந்து மீதமுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப் பாலம் காலப்போக்கில் அரிப்புக்குள்ளாகி அண்மைக்காலமாக இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளது.

இந்தப் பாலத்தில் கடந்த 2021.11.21 ஆம் திகதியன்று ஐந்து சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த பாலத்தை நிர்மாணித்துத் தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து பாலத்தை புனர் நிர்மாணம் செய்வதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு 226. 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் பாலத்தின் கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையிலேயே இந்தப்பாலத்தை சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நிர்மாணிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...