சிஐடியில் இருந்து வெளியேறிய யோஷித ராஜபக்ச: 2 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது!

Date:

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் அந்த காணி தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை (27.12.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போதுஇ அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...