மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன் அந்த காணி தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை (27.12.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போதுஇ அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது