நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

Date:

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 18 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC/ CEYPETCO) அறிவித்துள்ளது.

அந்த வகையில், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 313 இலிருந்து ரூ. 331 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத விலைத் திருத்தத்திற்கு அமைய, மண்ணெண்ணெய் விலை மாத்திரம் ரூ. 5 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் CEYPETCO எரிபொருள் விலைகள் வருமாறு…

CEYPETCO/ LIOC

  • சுப்பர் டீசல்: ரூ. 18 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 331
  • மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 188
  • பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 309
  • ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை  – ரூ. 286
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...