நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

Date:

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 18 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC/ CEYPETCO) அறிவித்துள்ளது.

அந்த வகையில், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 313 இலிருந்து ரூ. 331 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத விலைத் திருத்தத்திற்கு அமைய, மண்ணெண்ணெய் விலை மாத்திரம் ரூ. 5 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் CEYPETCO எரிபொருள் விலைகள் வருமாறு…

CEYPETCO/ LIOC

  • சுப்பர் டீசல்: ரூ. 18 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 331
  • மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 188
  • பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 309
  • ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை  – ரூ. 286
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...