நிரம்பி வழியும் 27 நீர்த்தேக்கங்கள்..!

Date:

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று நிரம்பி வழியும் நிலையில் உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன.

 

 

 

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...