பெண்களை மோசமாக நடத்தியதாக தாலிபான் தலைவர்களை கைது செய்யப்போகும் சர்வதேச நீதிமன்றம்!

Date:

பெண்கள் மற்றும் யுவதிகள் துன்பறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு தாலிபான் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச குற்றவிவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களின் உயர்மட்டத் தலைவர் ஹைபதுல்லாஹ் அஹன்ட்ஸதா (Haibatullah AKHUNDZADA) மற்றும் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி (Abdul Hakim HAQQANI) இருவரும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகப்பதற்கான வலுவாக காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களையும் யுவதிகளையும் கிரிமினலாக கருதி துன்புறுத்துவதற்கும் பாலினம் தொடர்பான தாலிபான்களின் கருத்தியலுடன் ஒத்துப்போகாதவர்களை துன்புறுத்துவதற்கும் இவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...