பெண்களை மோசமாக நடத்தியதாக தாலிபான் தலைவர்களை கைது செய்யப்போகும் சர்வதேச நீதிமன்றம்!

Date:

பெண்கள் மற்றும் யுவதிகள் துன்பறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு தாலிபான் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச குற்றவிவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களின் உயர்மட்டத் தலைவர் ஹைபதுல்லாஹ் அஹன்ட்ஸதா (Haibatullah AKHUNDZADA) மற்றும் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி (Abdul Hakim HAQQANI) இருவரும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகப்பதற்கான வலுவாக காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களையும் யுவதிகளையும் கிரிமினலாக கருதி துன்புறுத்துவதற்கும் பாலினம் தொடர்பான தாலிபான்களின் கருத்தியலுடன் ஒத்துப்போகாதவர்களை துன்புறுத்துவதற்கும் இவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...