மருதானை சாஹிரா மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை..!

Date:

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி அண்மைக்காலமாக பல துறைகளில் பிரகாசித்து வருகிறது.

பல விளையாட்டுத்துறைகளிலும் பரீட்சைகளிலும் இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை பல மட்டங்களிலும் சிறப்பான தேர்ச்சிகளை பெற்று வருகின்றது.

அந்தவகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற இப்பாடசாலையின் 5ஆம் தர மாணவர்கள் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

மொத்தமாக 243 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவர்களில் 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

அவர்களில் எழுபது (70) மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு  மேல் மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 100சதவீதமாகும்.

இப்பரீட்சையில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ‘நியூஸ்நவ்’ குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

 

Popular

More like this
Related

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...