வட மத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிவு: இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர, தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள மொழி இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சையும் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்றுக்காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில், மேற்படி வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...