24 மணித்தியாலத்துக்குள் அடக்குங்கள்: விக்டர் ஐவனின் கடைசி மரண சாசனம்..!

Date:

தனது மரணத்தின் பின்னரான கிரியைகள் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உயில் எழுதி வைத்துள்ளார்.

அதில் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவர் எழுதியிருந்ததாவது,

01. மரணத்தின் பின்னர் இறுதிக் கிரியைகள் கூடிய விரைவில் 24 மணித்தியாலத்துக்குள் நடத்துவது பொருத்தமானது. இறுதிச் சடங்கை சம்பிரதாய நிகழ்வாக ஆக்கிக்கொள்ள கூடாது. மதச்சடங்குகள் இருக்கக்கூடாது.

02. மூன்று பிள்ளைகளுக்கும் மரணத்தைப்பற்றி அறிவித்தால் பரவாயில்லை. அவர்கள் வெளிநாட்டிலோ அல்லது இலங்கையில் அவசரமாக வரமுடியாத இடத்திலோ இருந்தால் மரணச்சடங்குக்கு அவர்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

03. இறுதிக்கிரியைகள் பற்றி உறவினர்கள் நண்பர்கள், ராவய ஊழியர்கள், வாசகர்கள், மற்றும் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டியதில்லை.

04. இறுதிக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னரே சிறு பத்திரிகை அறிவித்தலின் மூலமாகவே அனைவருக்கும் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டும்.

05. சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பிரசுரிக்க வேண்டிய மரண அறிவித்தலின் மாதிரியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

06. இறுதிக் கிரியைகளின் பின்னரும் மரணத்தவர்களுக்காக செய்யப்படும் சம்பிரதாய நிகழ்வுகள் எதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மூலம்: பிபிசி சிங்களம்

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...