50 தொன் பேரீச்சம்பழங்களை சவூதி அரேபியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது!

Date:

உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மதீனாவும் மக்காவும் அமைந்திருக்கின்ற சவூதி அரேபியாவானது உலகம் பூராக உள்ள மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற அதேவேளை முஸ்லிம்களுடைய மார்க்கம் தொடர்பான விடயங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடராக செய்து வருகின்ற ஒரு நாடாகும்.

அந்த வகையில் பல வருடங்களாக சவூதி அரேபியா அரசு குறிப்பாக அதனுடைய தொண்டு நிறுவனங்களும் கூட இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் நெருங்குகின்ற போது பேரீச்சம் பழங்களை அன்பளிப்பாக வழங்குகின்ற ஒரு மரபு தொடராக இருந்து வருகின்றது.

அந்தவகையில் இம்முறையும் ரமழான் நோன்பு நெருங்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியா அரசு 50 தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு வழங்கியிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு புத்தசாசன மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் பங்களிப்புடன் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்துகொண்டு பேரீச்சம் பழங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர்களான  காதர் மஸ்தான், ரிஷாத் பதியூதீன், பிரதி சபாநாயகர் ரிஸ்வி ஸாலிஹ், அரச அதிகாரிகள் மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...