அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!

Date:

இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்’ தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் கொள்கைகள்” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர் தன்னுடைய துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மிகப்பெறுமதியான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதி கற்கையை பூர்த்தி செய்த அஷ்ஷெய்க் சுபியான் நளீமி அவர்களுக்கு ‘நியூஸ்நவ்’இன் வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...

Colombo Marathon போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo...