இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா (Sigiriya) கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.
சீகிரியா கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது, சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்களை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.