இஸ்ரேல் ஹமாஸ் யுத்த நிறுத்த  ஒப்பந்தம் நாளை காசா நேரப்படி காலை 8.30 மணிக்கு ஆரம்பம்!

Date:

சுமார் 50,000 மக்களை படுகொலை செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை காயப்படுத்தி வீடுகளையும் பாடசாலைகளையும் சகல கட்டமைப்புக்களையும் முற்றுமுழுதாக துவம்சம் செய்து கடந்த 15 மாதகாலமாக இஸ்ரேல் மேற்கொண்ட அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகளின் பகீரத முயற்சியால் உடன்பாடு காணப்பட்டு இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்தத்தின் முதலாவது கட்டம் நாளை காசா நேரப்படி அதாவது இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.

முழு உலகமும் எதிர்ப்பார்த்திருக்கின்ற யுத்த நிறுத்தம் நிரந்தர யுத்த நிறுத்தமாக மாறி முழு பலஸ்தீன மக்களும் நிரந்தர சமாதான காற்றை அனுபவிக்கின்ற காலம் உதயமாக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக..

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்தது. பிரதமர் அலுவலகம் ஜனவரி 17-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்த நிலையில், இஸ்ரேலிய அமைச்சரவையும் தன்னுடைய ஒப்புதலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...