‘உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்’; ‘நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்’; இரு நூல்களின் வெளியீட்டு விழா!

Date:

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் எழுதிய “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 :00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ராஜன் ஹுலின் Ester Sunday Attack (when the mystery hand Raised) என்ற நூலானது சிரேஷ்ட ஊடகவியலாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களினால் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...