காசாவில் குடும்பத்தை பாதுகாக்க மிகப்பெரிய பள்ளம் தோண்டி கூடாரம் அமைத்த தந்தை: அருகே உணவுக்காக காய்கறி தோட்டமும் அமைப்பு!

Date:

இஸ்ரேலிய தாக்குதல்களின் மத்தியில் தனது 10 பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாத்து வரும் காசாவைச் சேர்ந்த 37 வயதான தய்சீர் ஒபைட், தனது துணிச்சலாலும் பாராட்டத்தக்க முயற்சியாலும் எல்லோருக்கும் உதாரணமாகி உள்ளார்.

டெய்ர் அல்-பாலா பகுதியில் ஒரு பள்ளத்தை தோண்டி கூடாரம் அமைத்துள்ள அவர், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடும் தனது குழந்தைகளுக்கு போசாக்கான உணவை கொடுக்க  ஒரு சிறிய நிலத்தில் காய்கறி தோட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

மேலும், குளிர்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பலத்த மழை பெய்ததால், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, குடும்பத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மழைநீரையும் சேமித்து வைத்துள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி அன்று போர் தொடங்கியதிலிருந்து  பல முறை இடம்பெயர்ந்த பின்னரும் போரின் அச்சத்தையும் தவிர்த்து குடும்பத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அவரது மனவலிமை பாராட்டத்தக்கது.

தய்சீர் ஒபைட்டின் இந்த வாழ்க்கைப் போராட்டம், காசா பகுதியின் பலஸ்தீனியர்களின் தைரியமும் மனவலிமையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...