சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாவனல்லை ரிஸ்கி ஷெரீப் நேற்று (10) காலமானார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.

சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த இவர் மொஹமட் பஸால்,பாத்திமா ஆதிலா,பாத்திமா அகீலா ஆகியோரின் அன்பு தந்தையும், பாத்திமா பஸ்லியாவின் கணவரும் ஆவார்.

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், கலைஞர், சிறு கதை எழுத்தாளர், செய்தி தொகுப்பாளர், பத்திரிகையாளர் என்பது மட்டுமல்லாது, கலை இலக்கியத் துறையிலும் பல்வேறு ஆளுமைகளைக் கொண்டவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

( ஐ. ஏ. காதிர் கான்,பாரா தாஹீர் )

 

 

Popular

More like this
Related

சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள்,  2026...

பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க...

தங்கம் வென்ற ருமேஷ் தாயகம் வருகை

உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...