துருக்கியை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து: 76 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

Date:

துருக்கி நாட்டில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 76  ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தீ விபத்து பயத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க துருக்கி நாட்டின் போலு மாகாணம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பகுதியாக உள்ளது.

அந்த மாகாணத்தின் கர்தல்காயா பகுதியில், தி கிராண்ட் தர்தால் ஸ்கை ரிசார்ட் என்ற சொகுசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த கொடூர
தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது துருக்கியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருக்கின்றனர். கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 21ஆம்  திகதிஅந்த நட்சத்திர ஹோட்டலில் சமையலறையில் அதிகாலை 3:30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவிய தீ மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது.

தொடர்ந்து காற்று வேகமாக வீசத் தொடங்கிய நிலையில் 12 மாடி கட்டிடத்தில் முழுமையாக தீ பரவியது. ஆனால் விடுதியில் இருந்த தீ விபத்து அலாரம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. தீ முழுமையாக பரவிய பிறகு கடும் புகை காரணமாக அங்கிருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டதே தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து தீ மற்றும் கடும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட தொடங்கினர்.

12 மாடி கட்டிடத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அச்சம் காரணமாக பலர் ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளனர், சிலர் பெட் ஷீட்டுகளை பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழே இறங்க முயற்சித்துள்ளனர்.

இதற்கிடையே மூச்சு திணறல் மற்றும் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியான நிலையில், தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கும் சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்த்துள்ளது. பயம் காரணமாக ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் இருவர் உயிரிழந்த சோக சம்பவமும் நேரிட்டது.

கடுமையான புகை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 51 பேர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலருக்கும் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வரை அருகில் உள்ள விடுதிகளுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள விடுதிகள் தங்கி இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தேசத்திற்கு மிக வலி மிகுந்த தருணம் இது என துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சரான அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...